மனைவிய சமாதானப்படுத்தி அழைத்து வரனும்.. லீவு கேட்ட ஊழியர் - வைரலாகும் லீவ் லெட்டர்!
மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வர விடுமுறை கேட்டு ஊழியர் ஒருவர் எழுதிய கடிதம் வைரலாகி வருகிறது.
அரசு ஊழியர்
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் கல்வித்துறையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தனது அதிகாரிக்கு விடுமுறை கடிதம் அளித்துள்ளார்.அந்த கடிதத்தில் தனது 3 குழந்தைகளுடன் மனைவி, அவரது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன், மனைவியை சமாதானப்படுத்தி மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்துவர எனக்கு விடுப்பு தேவைப்படுகிறது. இதனால் ஆகஸ்ட் 4 முதல் 6 வரை விடுப்பு கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.
லீவ் லெட்டர்
அரசு ஊழியரின் இந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதே போன்று ஒருவர் வேறு ஒரு நிறுவனத்தில் தனக்கு இண்டர்வியூ இருப்பதாக உண்மையைக் கூறி விடுமுறை கேட்ட ஸ்கீரின் ஷாட்,
#Kanpur man asks for #leave to bring upset #wife back home, #letter goes #viral.
— UnMuteINDIA (@LetsUnMuteIndia) August 4, 2022
What is the weirdest reason for which you sought leave? #AbBasBolDaal#leaveapplication #viralpost #Trending #UnMuteIndia #YourSay pic.twitter.com/459qQw6FO8
மேலும் மேலாளருக்கு bye.. bye என எழுதிய ராஜினாமா கடிதம் போன்றவை இணையத்தில் அதிகமாக வைரலானது குறிப்பிடத்தக்கது.