திருட்டை பார்த்த 4ம் வகுப்பு சிறுமி - எரித்து கொன்ற 10 ம் வகுப்பு மாணவன்

Crime Haryana
By Karthikraja Jul 02, 2024 04:35 AM GMT
Report

 திருட்டை பார்த்த 9 வயது சிறுமியை 10 வகுப்பு சிறுவன் எரித்து கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா

அரியானாவின் குருகிராம் நகரில் செக்டார் 107 பகுதியில் இரு குடும்பங்கள் அருகருகே வசித்து நட்பாக பழகி வந்தனர். இந்நிலையில், அவர்களின் ஒரு குடும்பத்தில் இருந்த, 4-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி நேற்று காலை வீட்டில் பாதி எரிந்த நிலையில் கிடந்திருக்கிறார். 

10th student theft

பக்கத்து வீட்டில் இருந்த சிறுமியின் தாயார் வீடு திரும்பியதும் , இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் நேரில் வந்து விசாரித்தனர். அப்போது, வீட்டில் இருந்த 16 வயது சிறுவனை பிடித்து விசாரித்தனர். 

25 வயசாச்சு இன்னும் திருமணம் செய்து வைக்கல - கோபத்தில் பாட்டியை கொன்ற பேத்தி

25 வயசாச்சு இன்னும் திருமணம் செய்து வைக்கல - கோபத்தில் பாட்டியை கொன்ற பேத்தி

கடன்

10-ம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுவன், தொடக்கத்தில், 2 திருடர்கள் வீட்டினுள் புகுந்து சிறுமியை கொலை செய்து விட்டு தப்பி சென்றனர் என கூறினான்.இதில் சந்தேகமடைந்த போலீசார் தொடர்ந்து விசாரித்ததில், சிறுமியை நான் தான் கொலை செய்தேன் என மாணவன் ஒப்பு கொண்டான். 

அந்த மாணவனுக்கு ரூ.20 ஆயிரம் கடன் இருந்ததாகவும் அதை திருப்பி கொடுக்கவே நகை திருட்டில் ஈடுபட்டதாக தெரிய வந்தது. இதுபற்றி போலீசார் கூறும்போது, சிறுமியின் தந்தை நேற்று காலை வேலைக்கு சென்ற பின்னர், மாணவனின் வீட்டுக்கு சிறுமியின் தாய் மற்றும் சகோதரர் சென்றுள்ளனர். 

10th student theft

இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி, மாணவன் டியூசன் செல்கிறேன் என பொய் சொல்லி விட்டு, சிறுமியின் வீட்டுக்கு வந்துள்ளான். சிறுமியிடம் தண்ணீர் வாங்கி குடித்து விட்டு, சிறுமிக்கு வீட்டுப்பாடம் எழுத உதவி செய்திருக்கிறான்.

நகை திருட்டு

சிறுமி கழிவறைக்கு சென்றதும், படுக்கையறையில் உள்ள டிராயரை திறந்து அதில் இருந்த லாக்கர் சாவிகளை கொண்டு சில நகைகளை திருடியிருக்கிறான். அப்போது திரும்பி வந்த சிறுமி, நகையை பார்த்ததும் அதனை மாணவனிடம் இருந்து பறிக்க முயன்றுள்ளார். உடனே ஜன்னல் வழியே மாணவன் நகையை வெளியே வீசியுள்ளான்.

ஆனால், சிறுமி நகையை பறிக்க தொடர்ந்து போராடியுள்ளதால் சிறுமியை கடுமையாக தாக்கியுள்ளான். பின், வீட்டில் இருந்த கற்பூர கட்டிகளை எடுத்து, சிறுமியின் உடலில் தீப்பற்றி எரிய வைத்துள்ளான். சிறுமியின் தாய் வந்தபோது, வீட்டில் இருந்து புகை வந்துள்ளது.

இதனால், பயந்து போய் சத்தம் போட்டதும் பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்துள்ளனர். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். சிறுவனின் சில நண்பர்களிடமும் விசாரிக்கப்பட்டு வருகிறது.