ஒரு மாதமாக உயிருடன் புழுவை வாந்தி எடுத்த சிறுமி - பரிசோதனையில் மருத்துவர்கள் ஷாக்!

China
By Sumathi Jun 30, 2025 12:18 PM GMT
Report

சிறுமி திடீரென உயிருடன் உள்ள புழுக்களை வாந்தியாக எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடிகால் ஈக்கள்

சீனா, ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்த யாங்சோ நகரைச் சேர்ந்தவர் 8 வயது சிறுமி. இவர் ஒரு மாதத்திற்கு மேலாகவே தொடர்ச்சியாக உயிருள்ள புழுக்களை வாந்தி எடுத்து வந்துள்ளார்.

ஒரு மாதமாக உயிருடன் புழுவை வாந்தி எடுத்த சிறுமி - பரிசோதனையில் மருத்துவர்கள் ஷாக்! | Girl Vomits Live Worms For A Month China

இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில், மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர். அதில், வீடுகளில் சாதாரணமாகக் காணப்படும் வடிகால் ஈக்கள் (drain flies) காரணமாகவே அந்தச் சிறுமிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ரேடரில் சிக்காது; உளவு பார்க்க அதிர்ச்சி கண்டுபிடிப்பு - மிரளும் உலக நாடுகள்

ரேடரில் சிக்காது; உளவு பார்க்க அதிர்ச்சி கண்டுபிடிப்பு - மிரளும் உலக நாடுகள்

சிறுமி பாதிப்பு

அந்தச் சிறுமி ஒவ்வொரு முறையும் சுமார் 1 சென்டிமீட்டர் நீளமுள்ள உயிருள்ள புழுக்களை வாந்தியாக எடுத்துள்ளார். இது குறித்து நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் கூறுகையில், "வடிகால் ஈக்களின் லார்வாக்கள் நிலத்தடி நீரில் கலந்திருக்கலாம்.

ஒரு மாதமாக உயிருடன் புழுவை வாந்தி எடுத்த சிறுமி - பரிசோதனையில் மருத்துவர்கள் ஷாக்! | Girl Vomits Live Worms For A Month China

சிறுமி பல் துலக்கும்போது அல்லது கழிப்பறையை யூஸ் செய்யும் போது,​​அது உடலில் புகுந்து இருக்கும். அதுவே இந்தப் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளது. ஈக்கள் ரத்தம் மூலம் நோய்களைப் பரப்புவதில்லை. இருப்பினும் அவை மோசமான பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.

சரியான நேரத்தில் உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அவை கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.