சொந்த தங்கையை கர்பமாக்கிய 2 அண்ணன்கள் - சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

Sexual harassment POCSO
By Vinothini Jun 24, 2023 07:52 AM GMT
Report

கிருஷ்ணகிரியில் 2 பேர் தனது சொந்த தங்கையை கர்ப்பிணமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்ப்பமான சிறுமி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரது தாய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தந்தை மதுவுக்கு அடிமையானார்.

girl-sexually-harrassed-by-4-including-her-brother

மேலும், அந்த சிறுமியை பாதுகாப்பிற்கு யாரும் இல்லாமல் தனிமையில் வாழ்ந்து வந்தார். தொடர்ந்து, அந்த சிறுமியின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டு ஊர் மக்கள் அவரையும், அவரது தந்தையையும் விசாரித்தனர்.

அதில் 4 பேர் இந்த 17 வயது சிறுமியிடம் பாலியல் தொடர்பு கொண்டதாகவும் அதனால் இவர் 4 மாத கர்ப்பம் ஆனதாக கூறியுள்ளார்.

போலீசார் விசாரணை

இதனை தொடர்ந்து, அதிர்ச்சியடைந்த அந்த ஊர் மக்கள் ஊத்தங்கரை போலீசிடம் புகாரளித்தனர். மேலும், இந்த பாலியல் தொடர்பில் இருந்த தனது உடன்பிறந்த அண்ணன் மற்றும் பெரியப்பா மகன், உறவினர் சந்திரசேகரன் (42), தமிழ்வண்ணன் (29) ஆகிய 4 பேரும் சிறுமியை சீரழித்தது என தெரியவந்தது.

girl-sexually-harrassed-by-4-including-her-brother

பின்னர், இந்த 4 பேர் மீது போலீசார் போக்சோவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அதன்பிறகு கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அந்த சிறுமியின் தந்தையை தேடி வருகின்றனர். மேலும், அந்த சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.