இன்ஸ்டாகிராம் கள்ளக்காதலனுக்கு திருமணம் - கடை வீதியில் பெண் செய்த காரியம்!

Tamil nadu Chennai
By Jiyath May 04, 2024 09:36 AM GMT
Report

தனது கள்ளக்காதலனுக்கு திருமணம் என்பதால் பெண் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கள்ளக்காதல் 

சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி (28). இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். இதனிடையே நந்தினிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் மணிகண்டன் (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் கள்ளக்காதலனுக்கு திருமணம் - கடை வீதியில் பெண் செய்த காரியம்! | Girl Set Herself On Fire In Chennai

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் கணவன்-மனைவி போல் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மணிகண்டனுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, வேறு ஒரு பெண்ணை பார்த்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர்.

காதல் ஜோடி செய்த காரியம் - வாலிபரின் தாயை கட்டி வைத்து தாக்கிய கொடூரம்!

காதல் ஜோடி செய்த காரியம் - வாலிபரின் தாயை கட்டி வைத்து தாக்கிய கொடூரம்!

போலீசார் விசாரணை 

இதனால் அவர் நந்தினியுடன் பேசுவதை தவிர்த்தது வந்துள்ளார். இதுகுறித்தது அறிந்து மனமுடைந்த நந்தினி தண்டையார்பேட்டை வைத்தியநாதன் தெருவில் மணிகண்டன் வேலை செய்யும் ஐஸ்கிரீம் கடைக்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் கள்ளக்காதலனுக்கு திருமணம் - கடை வீதியில் பெண் செய்த காரியம்! | Girl Set Herself On Fire In Chennai

பின்னர் தனது இருசக்கர வாகனத்தில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டனை தீயை அணைத்துள்ளார்.

பின்னர் பலத்த தீக்காயத்தால் அலறிக்கொண்டிருந்த நந்தினியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். இந்த சம்பவம் குறித்து தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.