இன்ஸ்டாகிராம் காதல்: திருமணத்திற்கு மறுத்த காதலி - வாலிபர் செய்த காரியம்!

Tamil nadu Crime Virudhunagar
By Jiyath Apr 29, 2024 05:45 AM GMT
Report

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலி மீது காதலன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இன்ஸ்டா பழக்கம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முத்து கொத்தனார் தெருவைச் சேர்ந்தவர் பாண்டிசெல்வி (28). இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் காதல்: திருமணத்திற்கு மறுத்த காதலி - வாலிபர் செய்த காரியம்! | Girl Refused To Marry Youth Tried To Burn Her

இந்நிலையில் மதுரையை சேர்ந்த குணசேகர் (32) என்பவருடன் பாண்டிசெல்விக்கு இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி அவ்வப்போது இருவரும் நேரில் சந்தித்துள்ளனர்.

இதனிடையே இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக குணசேகரிடம் பேசுவதை தவிர்த்துள்ளார் பாண்டிசெல்வி. இருந்தும் குணசேகரன் அவரை சந்தித்து திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியுள்ளார்.

மிரட்டி சீரழித்த சகோதரர்; கணவரிடம் கதறி அழுத மனைவி - காத்திருந்த அதிர்ச்சி!

மிரட்டி சீரழித்த சகோதரர்; கணவரிடம் கதறி அழுத மனைவி - காத்திருந்த அதிர்ச்சி!

கொடூர செயல் 

ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த பாண்டிசெல்வி, ராஜபாளையம் தெற்கு போலீசில் குணசேகரன் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து பாண்டிசெல்வியின் வீட்டுக்கு வந்த அவர், திருமணத்துக்கு வற்புறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் காதல்: திருமணத்திற்கு மறுத்த காதலி - வாலிபர் செய்த காரியம்! | Girl Refused To Marry Youth Tried To Burn Her

அப்போதும் பாண்டிசெல்வி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குணசேகரன் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடியுள்ளார். பாண்டிசெல்வியின் அலறல் சத்தைத்தை கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், தீயை அனைத்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு குணசேகரனை வலைவீசி தேடி வருகின்றனர்.