வகுப்பறையில் மயங்கி விழுந்த சிறுமி; சீரழித்த அண்ணன் - கர்ப்பத்தால் அதிர்ச்சி!
ப்ளஸ் 1 மாணவிக்கு குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி கர்ப்பம்
நாமக்கல், பள்ளிபாளையம் அருகே உள்ள பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், வழக்கம் போல் பள்ளிக்கு வந்த சிறுமிக்கு மதிய இடைவேளையின் போது வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவியை ஆசிரியர்கள் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர்.
உறவினர் கொடுமை
அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து பிரசவ வார்டில் அனுமதித்ததில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன்பின் தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் விசாரணை நடத்தினர்.
அதில், சித்தி மகனான உறவினர் தங்கராஜ் வீட்டில் யாரும் இல்லாதபோது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, போலீசார் மாணவியின் உறவிரை போக்சோ வழக்கின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கண்ணாடியை திறந்ததும் அசுர வேகத்தில் தாக்கிய Eastern Indigo Snake... பதறவைக்கும் வைரல் காணொளி! Manithan
