இது ரியாலிட்டி ஷோவா.. இல்ல ஆபாச நிகழ்ச்சியா? எல்லை மீறிய பெண் - கொதிக்கும் மக்கள்!

Viral Video Sexual harassment Instagram Social Media
By Swetha Oct 24, 2024 01:00 PM GMT
Report

ரியாலிட்டி ஷோவில் பெண் போட்டியாளர் எல்லையை மீறி நடந்த வீடியோ வைரலாகியுள்ளது.

ரியாலிட்டி ஷோ

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் ரியாலிட்டி ஷோக்கள் மக்களால் அதிகம் விரும்பிப் பார்க்கும் ஒன்றாகும். அதில் பெரும்பாலும் சின்னத்திரை பிரபலங்களே பங்கேற்பார்கள். அந்த வகையில், தெலுங்கில் தனியார் தொலைக்காட்சிச் சேனலில் கடந்த வாரத்தில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

இது ரியாலிட்டி ஷோவா.. இல்ல ஆபாச நிகழ்ச்சியா? எல்லை மீறிய பெண் - கொதிக்கும் மக்கள்! | Girl Harases Men On Tv Reality Show Video Is Viral

அதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையில் போட்டி வைக்கப்பட்டது. அப்போது பலத்தினை நிரூபிக்கும் போட்டியில் ஆண்கள் அணியில் இருந்து ஒரு சின்னத்திரை பிரபலமும் பெண்கள் அணியில் இருந்து சின்னத்திரை பிரபலமும் வந்தனர்.

இருவருக்கும் இடையில் போட்டி தொடங்கியதும், பெண்கள் அணியில் இருந்த மற்றொரு சின்னத்திரை பிரபலம் நேரடியாக ஆண் போட்டியாளரிடம் வந்தார். அந்த பெண் ஆண் போட்டியாளரிடம் செய்தது பாலியல் சீண்டல் போல் தென்பட்டது எனலாம்.

எனக்கு சேனல் முக்கியமில்லை, திரும்ப கூப்பிடாதீங்க...விஜய் டிவியை குறித்து வெங்கடேஷ் பட்!

எனக்கு சேனல் முக்கியமில்லை, திரும்ப கூப்பிடாதீங்க...விஜய் டிவியை குறித்து வெங்கடேஷ் பட்!

கொதிக்கும் மக்கள்

காரணம் அந்த பெண் போட்டியாளரின் நடவடிக்கைகள் முகம் சுழிக்க வைக்கும் வகையில் இருந்துள்ளது. அதாவது, ஆண் போட்டியாளரின் கவனத்தை திசை திருப்ப, அவரைக் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுக்க முயற்சி செய்வது,

அவரது பாலியல் உணர்வைத் தூண்டுவதுபோல நடந்து கொள்வது என செய்து கொண்டு இருந்தார். இறுதியாக அந்தப் போட்டியில் பெண் போட்டியாளர் வெற்றி பெற்றார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் தொடங்கி பிரபலங்கள் வரை,

இதுவே ஆண் செய்திருந்தால் என்ன ஆகும் என கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த ஆண் கைது செய்யப்பட்டிருப்பார். அவதூறுக்கும் ஆளாகியிருப்பார். ஆனால் பெண் போட்டியாளர் இவ்வாறு நடந்து கொண்டதால் அனைவரும் அமைதியாக உள்ளனர் எனக் காட்டமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.