தந்தையின் விநோத பூஜை - உயிரைவிட்ட 4வயது குழந்தை! தொடரும் அதிர்ச்சி சம்பவம்?

Attempted Murder India Andhra Pradesh Child Abuse
By Sumathi Jun 17, 2022 03:46 AM GMT
Report

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில், தனது நான்கு வயது மகளிடம் விநோத பூஜையில் ஈடுபட்ட தந்தையால் அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4 வயது மகள்

நெல்லூர் மாவட்டத்திலுள்ள பெரரெட்டிப் பள்ளி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் வேணுகோபால். இவருக்கு இரட்டை மகள்கள் உண்டு. இந்நிலையில், இவர் தனது வீட்டில் தன் 4 வயது மகளை வைத்து ஓர் விநோத பூஜை செய்துள்ளார்.

தந்தையின் விநோத பூஜை - உயிரைவிட்ட 4வயது குழந்தை! தொடரும் அதிர்ச்சி சம்பவம்? | Girl Dies After Father Performed Weird Rituals

அந்தப் பூஜையில், குங்குமத்தை எடுத்து தனது மகளின் வாயில் வைத்து அடைத்துள்ளார், வேணுகோபால். இதனால் மூச்சுதிணறியதால் கதறிய சிறுமியின் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து ஓடி வந்து சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தீய சக்திகளை விரட்ட

எனினும் சிகிச்சைப் பலனின்றி அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து, வேணுகோபால் காவல் துறையிடம் கூறுகையில், தனது வியாபாரம் சில தீய சக்திகளால் பாதிக்கப்படுவதாகவும், அந்த தீய சக்திகளை விரட்டவே தான் இந்த பூஜை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தந்தையின் விநோத பூஜை - உயிரைவிட்ட 4வயது குழந்தை! தொடரும் அதிர்ச்சி சம்பவம்? | Girl Dies After Father Performed Weird Rituals

மேலும், இவர் ஏற்கனவே மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர்.

ஹிஜாப் அணியாத இஸ்லாமியர்கள் விலங்குகள் போன்றவர்கள்.. போஸ்டரால் சர்ச்சை!