இன்ஸ்டாகிராம் காதல், சிறுவர்கள் செய்த காரியம் - மீட்ட போலீசார்!

Tamil nadu Tamil Nadu Police
By Vinothini May 31, 2023 06:13 AM GMT
Report

திருப்பூரில் சிறுவரும் சிறுமியும் இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில், அவ்வூர் வடக்கு காவல் துறையினர் ரோந்து பணிகள் ஈடுபட்டிருந்தனர்.

girl-and-boy-escaped-from-home-police-rescued-them

அப்போது அங்கு 15 வயதுடைய ஒரு சிறுவன் மற்றும் 14 வயதுடைய ஒரு சிறுமியும் எங்கே செல்வது என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தனர்.

இதனை கண்ட போலீசார் சந்தேகம் அடைந்தனர், மேலும் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது அந்த சிறுவன் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்றும், சிறுமி கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

காதல்

இதனை தொடர்ந்து, விசாரணையில், இவர்கள் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளனர். பிறகு மொபைல் என்னை பரிமாற்றிக்கொண்டனர்.

girl-and-boy-escaped-from-home-police-rescued-them

முதலில் நண்பர்களாக பேசி வந்துள்ளனர், பின்னர் அது காதலாக மாறியுள்ளது.

தொடர்ந்து இவர்கள் கடந்த ஓராண்டாக காதலித்து வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

வீட்டில் இருந்தால் இரு வீட்டினரும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என்று இருவரும் வீட்டை விட்டு ஓடி வந்துள்ளனர்.

அப்போது தான் திருப்பூர் பேருந்து நிலையத்தில் இருவரையும் போலீசார் மீட்டு அவர்களது பெற்றோரை வரவழைத்து அனுப்பி வைத்தனர்.