காதலிக்க ஒரு பொண்ணு இல்லை.. 81 கோடி லாட்டரி வென்று குமுறும் நபர்!
ரூ.81 கோடி லாட்டரி வென்றும் சந்தோஷமில்லை என நபர் கூறியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
81 கோடி
ஜெர்மனி, டார்ட்மண்டை சேர்ந்தவ குர்சாட் யில்டிரிம்(41). இரும்பு தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன், இவர் வாங்கிய லாட்டரியில் ரூ.81 கோடி பரிசாகக் கிடைத்துள்ளது.
உடனே தனது வேலையை விட்ட அவர் அந்த பணத்தில் சுமார் 5 கோடிக்கு ஃபெராரி மற்றும் போர்ஷே சொகுசு கார்களை வாங்கியுள்ளார். மேலும், விலையுயர்ந்த கடிகாரம், மது வகைகள் என வாங்கி குவித்துள்ளார். இப்படி தனக்கு பிடித்த விஷயங்களையெல்லாம் செய்துகொண்ட அவர் புலம்பி தள்ளியுள்ளார்.
புலம்பும் நபர்
இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் இன்னும் சிங்கிளாகவே இருக்கிறேன். நான் இன்னும் தனிமையில் வாடுகிறேன். எனக்குக் காதலிக்கப் பெண் ஒருவர் தேவை. அவர் எப்படி இருந்தாலும் எனக்குக் கவலை இல்லை. என்னைக் காதலிக்க, நான் காதலிக்கப் பெண் ஒருவர் தேவை.. என்னுடன் பயணிக்க விரும்பும்..
என்னுடன் குடும்பம் நடத்த விரும்பும் பெண் ஒருவரையே நான் தேடுகிறேன். என்னிடம் இப்போது பல கோடி உள்ளது. இதுவரை என்னைக் கண்டுகொள்ளாத நபர்கள் கூட எனக்குக் கால் செய்து பணம் கேட்கிறார்கள். என் மீது பொறாமைப் படுகிறார்கள்.
அவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில் தான் நான் சொகுசு கார்களை வாங்கினேன். கடவுளின் கருணையால் எனக்கு இந்த பணம் கிடைத்துள்ளது. நான் ஆப்பிரிக்காவுக்குச் சென்று அங்குப் பணம் இல்லாதவர்களுக்கு நிச்சயம் உதவுவேன்" என்று கூறியுள்ளார்.