மண்ணை உண்ணும் நிலை; காசாவில் இருந்து சிறுவன்.. கலங்கவைக்கும் வீடியோ
காசா குறித்து சிறுவன் பேசிய வீடியோ பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.
பசி, பட்டினி
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோர் மாதம் தொடங்கிய போர் 15 மாதங்களுக்கும் மேலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனால், மக்கள் வீடுகளை இழந்து பசி, பட்டினியால் தவித்து வருகின்றனர். தொடர்ந்து கடந்த சில நாள்களுக்கு முன்பு 48 மணி நேரத்துக்குள் காஸாவில் உள்ள குழந்தைகளுக்கு உணவு கிடைக்க வில்லையெனில்,
சிறுவன் ஆதங்கம்
அங்குள்ள குழந்தைகள் இறந்து விடும் என்று ஐநா அவை கவலை தெரிவித்திருந்தது. இந்நிலையில் காசாவிலிருந்து சிறுவன் ஒருவன் பேசிய வீடியோ காண்போரை கண்கலங்க வைக்கிறது. அதில், “ மண்ணை உண்ணும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டீர்கள். இது சரியே இல்லை.
Share !!!🔄
— Gaza Strip (@GazaaStrip) June 19, 2025
🩸 "We have no food to eat..."
🔸 says a hungry child in Gaza.
Israel has blocked everything- food, water, life.
But now, Iran is teaching Israel a hard lesson.
Gaza is not alone anymore.#Gaza #IranVsIsrael pic.twitter.com/RqK0ukixlp
சிறிதேனும் இரக்கம் காட்டுங்கள். பசியாற மாவுப்பொருள் வேண்டும். ஒவ்வொரு நாளும் உதவிப்பொருள்கள் கொண்டுவந்த டிரக்கை நோக்கி ஓடுகிறோம். உணவுதான் கிடைப்பதில்லை.
இது முறையா, சிறிய ரொட்டித்துண்டின் விலை இந்திய நாணய மதிப்பில் 570 ரூபாய்க்கும் அதிகம். என்று மாறும் இந்த நிலை.” என்று தெரிவித்து மண்ணை உண்கிறார்.