இபிஎஸ்-ஐ மோசமாக பேசிய ஆதவ் அர்ஜூனா; கொந்தளித்த கவுதமி - என்ன சொன்னார் பாருங்க..
ஆதவ் அர்ஜுனாவுக்கு எந்தவித தகுதியும் இல்லை என நடிகை கவுதமி ஆவேசம் தெரிவித்துள்ளார்.
ஆதவ் அர்ஜுனா பேச்சு
நடிகை கவுதமி சீர்காழி கோவிலிக்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா பேசிய வார்த்தைகளும் பேசிய விதமும் பலவிதத்தில் மிகவும் தவறான விஷயம்.
எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கக் கூடிய தகுதி இல்லை. அவருக்கு தகுதி இருக்கானு கூட நான் கேட்க மாட்டேன். அவருக்கு தகுதியே இல்லை. ஆதவ் அர்ஜுனா, அரசியலில் ஒழுங்காக காலே எடுத்து வைக்கவில்லை. இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு.
கவுதமி காட்டம்
அப்படியிருக்கும் போது அரசியலில் இத்தனை வருஷமாக இருந்து 4 ஆண்டுகள் முதல்வராக இருந்து வெற்றிகரமாக பல்வேறு சாதனைகளை புரிந்தவர் எடப்பாடி. ஆதவ் அர்ஜுனாவுக்கு பொது வாழ்க்கையில் நல்ல இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் அவர் முதலில் நாகரீகத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.
பொது மேடையில் ஒரு தலைவரை பார்த்து நிறைய பேர் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள். ஆனால் ஆதவ் அர்ஜுனாவை பார்த்து யாரும் இது போல் மரியாதை குறைவாக பேச கற்றுக் கொள்ள கூடாது. மக்களுக்கு நேர்மையான, நியாயமான ஆட்சி வர வேண்டும்.
அந்த ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் வர வேண்டும். அதிமுக ஆட்சி அமைய அத்தனை உழைப்பையும் கொடுப்போம் என தெரிவித்துள்ளார். ஆதவ், எடப்பாடி பழனிசாமியையும் அண்ணாமலையையும் தரக்குறைவாக பேசும்படி இருந்தது. இதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்த நிலையில் அவர் வருத்தம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.