கங்குலியின் மாரடைப்புக்கு காரணம் இதுதான் - மேற்கு வங்க மார்க்சிஸ்ட் தலைவர் பரபரப்பு தகவல்!

ganguly-india-cricket
By Jon Jan 05, 2021 02:00 PM GMT
Report

அரசியலில் சேரச் சொல்லி சவுரவ் கங்குலிக்கு அதிகமான நெருக்கடி கொடுக்கப்பட்டதால் மாரடைப்பு வந்திருக்கலாம்’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் அசோக் பட்டாச்சார்யா குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி கடந்த சனிக்கிழமை லேசான நெஞ்சுவலி ஏற்பட்டு கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், அரசியலில் இணைய வலியுறுத்தி பாஜ தரப்பில் கங்குலிக்கு கடும் நெருக்கடி அளிக்கப்படுவதாக மேற்கு வங்கத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அசோக் பட்டாச்சார்யா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

ஆனால், இதற்கு பதில் அளித்துள்ள, மேற்கு வங்க பாஜ தலைவர் திலீப் கோஷ், சிலர் எல்லாவற்றிலும் அரசியலை பார்க்கின்றனர். அவர்களின் மோசமான மனநிலையே இதற்கு காரணம்என்றார். மாரடைப்புக்கு முன்னதாக கங்குலி, மேற்கு வங்க ஆளுநரை சந்தித்து பேசினார்.

அதைத் தொடர்ந்து கங்குலி பாஜகவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.