அக்‌ஷயாவுக்கு தினமும் ரத்தம் எடுத்து.. கருணை கொலை நிலைமையில் அவர் - கானா பாலா!

Bigg Boss Tamil Singers Actress
By Vinothini Nov 22, 2023 01:30 PM GMT
Report

பாடகர் கானா பாலா பிக் பாஸ் வீடு குறித்து பேசியுள்ளார்.

பிக் பாஸ்

பிக்பாஸ் வீட்டில் இருந்து சமீபத்தில் எலிமினேட் ஆன கானா பாலா, முதன் முதலாக பேட்டியளித்துள்ளார். அதில், "நான் இன்னும் கொஞ்சம் கற்றுக் கொண்டு உள்ளே போயிருக்க வேண்டும். அது இல்லாததால் உஷாராக இல்லாமல் போய்விட்டேன். 2 வாரத்தில் விவாதம், 3வது வாரத்தில் சண்டை, 4வது வாரம் இருந்திருந்தால் நான் விளையாடியிருப்பேன். ஆனால், அதற்கு முன் எவிக்ட் ஆகிவிட்டேன்.

Akshaya Udayakumar

காலை டிபனுக்கு, மதியம் லன்ச்க்கு, நைட் டின்னருக்கு ஒரு கன்டண்ட் கொடுக்கிறது தான் விசித்ரா வேலை. விசித்ரா, மாயா, பூர்ணிமா எல்லாரும் ஒன்னா இருந்தவங்க தான். பெரிய பூகம்பம் நடந்தாலும், எப்படி பேச முடியும்? அப்புறம் எப்படி அதில் உண்மையான கோபம் இருக்கும்? இது தான் என்னால் இந்த விளையாட்டை உணர முடியாமல் போக காரணம். எனக்கு ஒரே குழப்பமா இருக்கு.

ஆபாச பேச்சு.. மனசுக்கு கஷ்டமா இருக்கு, அவர் காமெடியா சொல்லிருப்பார் - சீமான் ஆதரவு!

ஆபாச பேச்சு.. மனசுக்கு கஷ்டமா இருக்கு, அவர் காமெடியா சொல்லிருப்பார் - சீமான் ஆதரவு!

பேட்டி

தொடர்ந்து, "தினேஷ், மாயா, விஷ்ணு ஆகியோர் போட்டியில் கடுமையாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். பூர்ணிமா நன்றாக தான் விளையாடுகிறார், ஆனால், நடந்த பிரச்னையை திரும்ப பேசுவது தான் எரிச்சலாக வருகிறது. பூர்ணிமா நல்ல பொண்ணு என நிரூபிக்க தான் லட்டு கொடுத்து நடித்தார். 6 பேரை நம்பி தான் இந்த வாழ்க்கை போகுது என்று அக்‌ஷயா இருக்கிறார்.

Akshaya Udayakumar

இருந்து எதுக்கு நரக வேதனை? அவங்க ஒரு நோயாளி, தினமும் ரத்த எடுத்து, டயாலிசிஸ் பண்ணிட்டு பாவம் உயிரே போகுது. கருணை கொலை பண்ணிடுங்கிற நிலைமை. அந்த நிலைமையில எதுக்கு விளையாடனும்? பாவம் அவங்க போகட்டும். திரும்ப மூன்று போட்டியாளர்கள் போவதாக கூறுகிறார்கள்.

பிரதீப், விஜய், யுகேந்திரன் ஆகிய மூன்று பேர் போகலாம். ஆண்கள் போனால் தான் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும். பெண்கள் திரும்ப போனால், அழ வைத்து உட்கார வைத்துவிடுவார்கள். போட்டி சுவாரஸ்யமாக இருக்காது" என்று பேசியுள்ளார்.