சஞ்சுவிற்கு முக்கியத்துவம்....ஓரங்கட்டப்படும் பண்ட்!! தலைமை பயிற்சியாளர் கம்பீரின் திட்டம்

Rishabh Pant Indian Cricket Team Sanju Samson Gautam Gambhir
By Karthick Jul 04, 2024 07:40 AM GMT
Report

கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக விரைவில் நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

சஞ்சு - பண்ட்

இந்திய அணியில் தோனி ஓய்வு பெற்ற பிறகு, யார் அணியின் விக்கெட் கீப்பராக வருவார்கள் என்ற கருத்துக்கள் எழுந்தது. அந்த இடத்தை சிறிது காலம், கே.எல்.ராகுல் வைத்திருந்த நிலையில், பின்னர் முழுவதுமாக ரிஷப் பண்ட் நிரப்பினார்.

Sanju Samson and Rishabh Pant

அதே நேரத்தில் அணிக்குள் சஞ்சு சாம்சனுக்கு பெரும் ஆதரவுகள் எழுந்தது. ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பான ஆட்டத்தை கேப்டன், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என விளங்கினார் சஞ்சு.

கம்பீரின் மறைமுக நெருக்கடி - சைலெண்டாக ஓய்வு அறிவித்த வீரர்கள்! போட்டுடைத்த ரோகித்

கம்பீரின் மறைமுக நெருக்கடி - சைலெண்டாக ஓய்வு அறிவித்த வீரர்கள்! போட்டுடைத்த ரோகித்

தற்போது அணிக்கு தலைமை ஏற்கவுள்ள கம்பீர், தொடர்ந்து சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடமளிக்க வேண்டும் என கோரிக்கைகளை வைத்து வந்திருந்தார். அப்படியிருக்கும் நிலையில், தான் தற்போது அணிக்கு தலைமை பயிற்சியாளராக வரவிருக்கும் கம்பீர் சஞ்சு சாம்சனுக்கு ஆதவாக இருப்பார் என நம்பப்படுகிறது.

Gautam Gambhir

நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் சஞ்சுவிற்கு அணியில் விளையாட இடம் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் ஜிம்பாப்வே புறப்பட்டுள்ள இந்திய அணியில் அவர் இடம்பெற்றுள்ளார். இத்துடன் பண்ட் டி20 போட்டியில் பெரிதாக சோபிக்கவில்லை. அதனால் சிறிது காலம் அணியில் சஞ்சுவிற்கு முக்கியத்துவம் அழைக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.