சின்ன பையன் வாழ்க்கையை காலி பண்ணிடாதீங்க..! ஜெய்ஸ்வாலின் நிலை - கம்பீர் Advice
இளம் வீரர் ஜெய்ஸ்வால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசி அசத்தினார்.
ஜெய்ஸ்வால் அசத்தல்
இந்தியா அணியில் தற்போது கவனம் பெரும் வீரராக மாறியுள்ளார் ஜெய்ஸ்வால். துவக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படும் ஜெய்ஸ்வால் இது வரை இந்திய அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
6 போட்டிகள் தான் என்றாலும், அதில் 1 இரட்டை சதம், 2 சதம், 2 அரை சதம் என அசத்தியுள்ளார். இளம் வீரர் என்பதால் ஜெய்ஸ்வால் மீது இந்திய அணி ரசிகர்கள் மட்டுமின்றி உலக அரங்கிலும் ஜெய்ஸ்வால் கவனம் ஈர்த்துள்ளார்.
கம்பீர் கருத்து
இந்நிலையில், ஜெய்ஸ்வால் குறித்து கமபீர் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகின்றது. அவர் வெளியிட்டுள்ள பதிவில், அவரை புகழ்ந்து தள்ளி ஒரு ஹீரோவாக மாற்றி விடாதீர்கள். அவருக்கு என ஒரு பிம்பத்தை உருவாக்கி விட்டால் அவர் தன் இயல்பான ஆட்டத்தை ஆட முடியாமல் போய்விடும் என எச்சரித்து இருக்கிறார்.
அந்த இளைஞனை விளையாட விடுங்கள். கடந்த காலங்களில் ஊடகங்கள், அவர்களை ஹீரோக்கள் போல் காட்டி, அவர்களின் சாதனைகளை மிகைப்படுத்தி பேசும் பழக்கம் உள்ளது" என்று கவுதம் கம்பீர் கூறி உள்ளார்.