அதனை தவிர்க்கவே முடியாது - வீரர்கள் விளையாடி தான் ஆகணும்!! முதல் கண்டிஷன் போட்ட கம்பீர்
இந்திய வீரர்கள் 3 வகை கிரிக்கெட் போட்டிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
டி20, ஒரு நாள், டெஸ்ட் என ஒவ்வொரு அணிக்கு தனி தனி டீம் வேண்டும் என அவர் நிபந்தனை வைத்திருப்பதாகவும், டி20 தொடரில் சீனியர் வீரர்கள் இருக்கக்கூடாது என கூறினார் என்றெல்லாம் தகவல் வெளிவந்தன
அதே நேரத்தில், ரோகித் விராட் ஜடேஜா ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்ததும் கம்பீர் நெருக்கடி தான் கரணம் என்றெல்லாம் கூறப்பட்டது. தற்போது தலைமை பயிற்சியாளராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக வெளிப்படையாக பேசியுள்ளார் கம்பீர்.
தவிர்க்கவே
அவர் பேசும் போது, காயம் ஏற்படுவது சகஜம் தான். ஆனால் வீரர்கள் அனைத்து வகை போட்டிக்கும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். அப்போது காயம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது தான்.
ஒரு ஃபார்மட்டிற்கு மட்டும் ஒரு வீரர் இருக்க போவதில்லை. காயத்தை மேற்கோளாகட்டுவது நாம் கட்டுப்பாட்டில் அவை இல்லை - இவ்வாறு கம்பீர் தெரிவித்துள்ளார்.