நியூஸ் பேப்பரில் சுடச் சுட பஜ்ஜி சாப்பிடுறீங்களா? கவனமா இருங்க - எச்சரிக்கை விடுத்த fssai

By Sumathi Oct 05, 2023 04:58 AM GMT
Report

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

நுண்ணுயிரிகள்

FSSAI ஆணையத்தின் CEO, G. கமலா வர்தனா ராவ் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சில தகவல்களை எடுத்துரைத்துள்ளார். செய்தித்தாளில் விநியோகம் செய்யும் போது அது பல்வேறு சுற்றுசூழலை சுற்றி வரும்.

நியூஸ் பேப்பரில் சுடச் சுட பஜ்ஜி சாப்பிடுறீங்களா? கவனமா இருங்க - எச்சரிக்கை விடுத்த fssai | Fssai Warns Using Newspaper For Food Packing

இதன் காரணமாக அவற்றில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா, வைரஸ்கள் அல்லது பிற நுண்ணுயிரிகள் படிந்திருக்கக்கூடும். இந்த நியூஸ் பேப்பரை பயன்படுத்தி நாம் உணவுகளை பேக்கிங் செய்யவோ அல்லது சேமிக்கவோ செய்யும் பொழுது இந்த நுண்ணுயிரிகளை நாம் நேரடியாக வாய் வழியாக நம் உடலுக்குள் அனுப்பி வைக்கிறோம்.

தென்காசி பிரபல பார்டர் பரோட்டா கடை - 200கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

தென்காசி பிரபல பார்டர் பரோட்டா கடை - 200கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

 எச்சரிக்கை

பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் கெட்டுப் போன இந்த உணவுகளை நாம் சாப்பிடும் பொழுது அதன் காரணமாக ஏராளமான உடல் நலக் கோளாறுகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. அதுமட்டுமல்லாமல் செய்தித்தாளை பிரிண்ட் செய்வதற்கு பயன்படுத்தப்படும் இங்கில் பல்வேறு பயோ ஆக்டிவ் மெட்டீரியல்கள் உள்ளன.

நியூஸ் பேப்பரில் சுடச் சுட பஜ்ஜி சாப்பிடுறீங்களா? கவனமா இருங்க - எச்சரிக்கை விடுத்த fssai | Fssai Warns Using Newspaper For Food Packing

இந்த பொருட்களும் நமது ஆரோக்கியத்தில் மோசமான சில தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஃபுட் கிரேட் கண்டெய்னர்கள் போன்ற அங்கீகரிக்கப்பட்ட உணவு பேக்கேஜிங் மெட்டீரியல்களில் உணவை கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.

அதன்படி, உணவுகளை சுருட்டி கொடுக்கவோ மூடி வைக்கவோ, பரிமாறவோ அல்லது பொரிக்கப்பட்ட உணவுகளில் இருக்கக்கூடிய அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சவோ செய்தித்தாளை பயன்படுத்தக்கூடாது.