UPI முதல் ஏடிஎம் கட்டணம் வரை - ஜூலை 1 முதல் அமலுக்கு வரப்போகும் மாற்றங்கள்
ஜூலை 1 முதல் பல புதிய நடைமுறைகள் அமலாக உள்ளன.
புதிய மாற்றங்கள்
ரயிலில் தட்கல் டிக்கெட் சேவையில், வருகிற ஜூலை 1 முதல் முன்பதிவுக்கு ஆதார் அடையாளம் கட்டாயமென்றும் தெரிவித்துள்ளது. ரயில்வேயால் அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் முகவர்களுக்கு தட்கல் முன்பதிவு நேரத்தில் 30 நிமிடங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏசி பெட்டிகளுக்கு காலை 10 முதல் 10.30 மணி வரையிலும் ஸ்லீப்பர் பெட்டிகளுக்கு காலை 11 முதல் 11.30 மணி வரையிலும் முகவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது. ஏசி அல்லாத விரைவு ரயில்களில் ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசா வீதம் டிக்கெட் கட்டணம்.
ஏசி விரைவு ரயில்களில் ஒரு கிலோமீட்டருக்கு 2 பைசா வீதம் டிக்கெட் கட்டணம். இரண்டாம் வகுப்பு பயணத்தில் 500 கிலோமீட்டருக்கு பிறகு, ஒவ்வொரு கிலோமீட்டருக்கு தலா 50 காசுகள் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இனி பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் மத்திய நேரடி வரி வாரியத்தால் (CBDT) இது செயல்படுத்தப்படவுள்ளது.
கூகுள்பே, ஃபோன்பே மற்றும் பேடிஎம் போன்ற அனைத்து UPI-அடிப்படையிலான ஆப்ஸ்களும் இனி பரிவர்த்தனைகளின்போது பெறுநரின் அதிகாரப்பூர்வ பேங்க் அக்கவுன்ட் பெயரை மட்டுமே காண்பிக்கும்.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஜூலை மாதத்தில் EPFO 3.0-ஐ அறிமுகப்படுத்தும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது ATMகள் மற்றும் UPI மூலம் உடனடி PF பணம் எடுப்பதற்கும், UPI செயலிகள் மூலம் இருப்புச் சரிபார்ப்புகளுக்கும், விரைவான கோரிக்கை செயலாக்கத்திற்கும் உதவும்.