ஒயினுக்கு வந்த சோதனை; குடிப்பதை குறைத்துக்கொண்ட மக்கள் - அரசு அதிர்ச்சி முடிவு!
உபரி ஒயினை ஒழிக்க அரசு 200 மில்லியன் யூரோ நிதியை ஒதுக்கியுள்ளது.
ஒயின்
கொரோனா காலத்தில் ஒயின் உட்பட ஒட்டுமொத்த மது ரகங்களின் விற்பனை உச்சம் தொட்டது. எதிர்ப்பு சக்திக்கு மது உதவும் என்று வதந்தி கூட பரவி வந்தது. அதன்பின் நிலைமை அப்படியே மாறியது.
அதனால் ஒயின் உற்பத்தியாளர்கள் மற்றும் அத்தகைய தொழிலில் ஈடுபட்டவர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ள ஒயினை அளிக்க உதவுவதற்கு பிரான்ஸ் அரசு முன் வந்துள்ளது.
அரசு முடிவு
இது தொடர்பாக ஐரோப்பிய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒயினை அழிப்பதற்காக 216 மில்லியன் யூரோ (சுமார் 17829 கோடி) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியை கொண்டு ஒயினை அளித்து அதில் இருந்து பெறப்படும் ஆல்கஹாலை கொண்டு வாசனை திரவியங்கள், சானிடைசர் போன்ற பொருட்களை தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.