2 நாள் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார் பிரதமர் நரேந்திர மோடி..!
இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
அதிபர் மெக்ரோனை சந்திக்கும் மோடி
பிரான்ஸ் நாட்டு அதிபர் மெக்ரோனை நேரில் சந்தித்து அவருடன் விரிவான ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில்,
அதிபர் மெக்ரோனுடனான சந்திப்பை நான் எதிர்நோக்கி உள்ளேன். நீண்டகால மற்றும் நம்பதக்க நட்புறவை அடுத்த 25 ஆண்டுகளுக்கு முன்னெடுத்து செல்வதற்கான விரிவான விவாதங்களை நடத்த உள்ளேன்.
2022-ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டுக்கு கடைசியாக அரசு முறை பயணம் மேற்கொண்டதில் இருந்து பல முறை அவரை சந்திக்கும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது.
சமீபத்தில் நடப்பு மே மாதத்தில் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி-7 உச்சி மாநாட்டின்போது அவரை சந்தித்தேன் என பிரதமர் மோடி கூறிய தகவல் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2 நாள் பயணம்
2 நாள் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு செல்லும் பிரதமர் மோடி பிரான்ஸ் தேசிய தினத்தில் அணிவகுப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இதில் இந்திய முப்படைகள் குழுவும் அணிவகுப்பில் பங்கேற்கிறது. பின்னர் பிரான்ஸ் அதிபர் மெக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
அதில் இந்தியா - பிரான்ஸ் ராணுவ உறவின் 25-வது ஆண்டு ஆகும்.
பேச்சுவார்த்தையின் போது கலாசாரம், அறிவியல், பாதுகாப்பு, கல்வி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்த உள்ளார்.