பள்ளிகளில் இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணியக்கூடாது - மத ரீதியான ஆடைகளுக்கு தடை!
இஸ்லாமிய மாணவிகள் பார்த்த அணிவதற்கு அரசு தடை விதித்துள்ளது.
பிரான்ஸ் நாடு
பிரான்ஸ் நாட்டில், 19ம் நூற்றாண்டு சட்டங்கள் பொதுக் கல்வியில் இருந்து பாரம்பரிய கத்தோலிக்க செல்வாக்கை நீக்கியதில் இருந்து அரசு பள்ளிகளில் மத அடையாளங்களுக்கு கடுமையான தடையை அமல்படுத்தியது. இஸ்லாமியர்களின் தலைப்பகுதியை மூடும் உடையான ஹெட்ஸ்கர்ப் உடைக்கு 2004ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தலை முதல் கால் வரை உடல் முழுவதும் மூடும் இஸ்லாமிய உடையை பொது இடங்களில் அணிய 2010ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டது. அதேபோல், பிரான்ஸ் பள்ளிக்கூடங்களில் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசு தடை
இந்நிலையில், பிரான்சில் வரும் 4ம் தேதி புதிய பள்ளி ஆண்டு தொடங்குகிறது. அப்பொழுது அரசுப்பள்ளிகளில் இஸ்லாமிய மத உடையான அபயா (பர்தா) ஆடையை அணியை தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டல் கூருகையில், "பள்ளிகளில் இனி அபாயா அணிய முடியாது என்று முடிவு செய்துள்ளேன். நீங்கள் வகுப்பறைக்குள் செல்லும்போது, மாணவர்களைப் பார்த்து அவர்களின் மதத்தை நீங்கள் அடையாளம் காண முடியாது" என்று கூறியுள்ளார்.