நடுங்கவைத்த சம்பவம்; டாஸ்மாக் கடைகள் மூடல் - குற்றவாளியை நெருங்கிய தனிப்படை!

Crime Tiruppur
By Sumathi Sep 05, 2023 03:43 AM GMT
Report

 4 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 4 பேர் படுகொலை

திருப்பூர், பல்லடம் அருகே கள்ளக்கிணறு என்ற கிராமத்தில் வசித்து வந்த செந்தில்குமார், அவரது குடும்பத்தைச் சேர்ந்த மோகன், புஷ்பவதி, ரத்தினாம்பாள் ஆகிய 4 பேரும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.

நடுங்கவைத்த சம்பவம்; டாஸ்மாக் கடைகள் மூடல் - குற்றவாளியை நெருங்கிய தனிப்படை! | Four People Muder In Palladam Tasamc Shut Down

இரவு வீட்டு வாசல் அருகே மது அருந்த வந்த வெங்கடேசன் என்பவரிடம் இங்கு மது அருந்தக் கூடாது என்று கூறியதைத் தொடர்ந்து இந்த பரபரப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதையடுத்து, படுகொலை செய்யப்பட்ட 4 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

டாஸ்மாக் மூடல்

மேலும், கொலை செய்த 3 பேரையும் கைது செய்தால் மட்டுமே உடல்களை வாங்குவோம் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

நடுங்கவைத்த சம்பவம்; டாஸ்மாக் கடைகள் மூடல் - குற்றவாளியை நெருங்கிய தனிப்படை! | Four People Muder In Palladam Tasamc Shut Down

இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய கொலையாளியான வெங்கடேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். தொடர்ந்து, அப்பகுதியில் மதுபானம் விற்பனை செய்யப்படும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது.

சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் உடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.