காதலர்கள் கண்முன் விடிய விடிய பாலியல் வன்கொடுமை - சகோதரிகளுக்கு கொடூரம்!

Sexual harassment Crime Dindigul
By Sumathi Apr 06, 2024 03:30 AM GMT
Report

காதலர்கள் கண் முன்னே இளம்பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை

திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில், 19, 17 வயது சகோதரிகள் அதே பகுதியைச் சேர்ந்த 2 இளைஞர்களை காதலித்து வந்துள்ளனர்.

காதலர்கள் கண்முன் விடிய விடிய பாலியல் வன்கொடுமை - சகோதரிகளுக்கு கொடூரம்! | Four Men Tied Up Lovers And Raped Girls Dindigul

இந்நிலையில், சகோதரிகள், இருவரும் தங்களது காதலர்களுடன் இடையகோட்டையில் நடைபெற்ற ஒரு கோவில் திருவிழாவுக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து, அவர்கள் நான்கு பேரும் அங்குள்ள தனியார் ஹோட்டலில் உணவு அருந்திவிட்டு சாலையோரம் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், காதலர்கள் 4 பேரையும் மிரட்டி, அழைத்து பைக்கில் ஏற்றிக்கொண்டு தாமரைக்குளம் பகுதிக்கு வந்துள்ளனர். அதன்பின், காதலர்கள் இருவரையும் கட்டிப்போட்டு, அந்த நான்கு பேரும் அந்த பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியுள்ளனர்.

நிர்வாணமாக்கி ஊர்வலம்; கூட்டுப் பாலியல் வன்கொடுமை - பழங்குடியின பெண்களுக்கு கொடூரம்!

நிர்வாணமாக்கி ஊர்வலம்; கூட்டுப் பாலியல் வன்கொடுமை - பழங்குடியின பெண்களுக்கு கொடூரம்!

4 பேர் வெறிச்செயல்

தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசாருக்கு, மீனாட்சி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சரண்குமார் (21), முத்தழகுபட்டியைச் சேர்ந்த வினோத்குமார் (26), முருகபவனத்தைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (22), பிரசன்ன குமார் (25) ஆகிய 4 பேரும் தான் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.

காதலர்கள் கண்முன் விடிய விடிய பாலியல் வன்கொடுமை - சகோதரிகளுக்கு கொடூரம்! | Four Men Tied Up Lovers And Raped Girls Dindigul

அதன்பேரில், சரண்குமார், வினோத்குமார், சூரியபிரகாஷ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் தலைமறைவாக உள்ள பிரசன்ன குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.