36 நாட்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை - வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம்!

Attempted Murder Sexual harassment Crime
By Sumathi Sep 24, 2022 01:57 PM GMT
Report

36 நாட்கள் ஒரு பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கூட்டு பாலியல் வன்கொடுமை

ஹரியானாவில் கடந்த ஜூலை 27ம் தேதி 47 வயதான பெண் ஒருவர் மாடுகளுக்குத் தீவனம் சேகரிக்கச் சென்றபோது காரில் வந்தவர்கள் அவரைக் கடத்திச் சென்றுள்ளனர். அவரை ராஜஸ்தானில் உள்ள ஒரு சிறிய கிராமத்திற்குக் கடத்தி சென்று அறையில் அடைத்து வைத்துக்

36 நாட்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை - வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம்! | Woman Kidnapped Held Captive And Gang Raped

கூட்டுப் பாலியல் செய்தாக பாதிக்கப்பட்ட பெண் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு மயக்க மருந்துக் கொடுத்துப் பல முறை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதனை காணொளியாகப் பதிவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதிர்ச்சி சம்பவம்

கடத்தியவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் காணொளிகளை வைத்து பெண்ணின் குடும்பத்திடம் ரு.3 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர் செப்டம்பர் 1ம் தேதி அந்த காணொளிகளை இணையத்தில் வெளியிடாமல் இருக்க குடும்பத்தினரிடமிருந்து ரூ.3 லட்சம் பெற்று அவரை விடுவித்துள்ளனர்.

36 நாட்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை - வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம்! | Woman Kidnapped Held Captive And Gang Raped

இந்த கொடுமையான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துக் காவல் கண்காணிப்பாளர் வருண் சிங்லா தெரிவிக்கையில், புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டியவர்கள் மேல் வழக்குப்  பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தீவிர விசாரணை நடத்தி உண்மை வெளிப்படுத்தப்படும் என்றும் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.