இலங்கை அணியின் முன்னாள் வீரர், தற்போது வெளிநாட்டில் பஸ் டிரைவராக
இலங்கை அணியின் முன்னாள் வீரரான சூரஜ் ரந்திவ் தற்போது ஆஸ்திரேலியாவில் பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சூரஜ் ரந்திவ்(வயது 37), இலங்கை அணிக்காக 12 டெஸ்ட் போட்டிகளில் 43 விக்கெட்டுகள், 31 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 36 விக்கெட்டுகள், மற்றும் 7 டுவனெ்டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான 2011ம் உலகக்கோப்பை அணியிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் விளையாடி இருக்கிறார். இந்நிலையில் இவர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பஸ் ஓட்டிச்செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. அதாவது, பிரான்ஸ் நாட்டிற்கு சொந்தமான டிரன்ஸ்டெவ் என்ற பஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருவது தெரியவந்தது.
இவர் மட்டுமின்றி சிந்தகா ஜெயசிங்கே என்ற மற்றொரு இலங்கை வீரர், மற்றும் ஜிம்பாப்வே நாட்டின் வீரர் ஆகியோரும் அதே நிறுவனத்தில் பஸ் டிரைவர்களாக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் பிரபல செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே, சமீபத்தில் நடந்து முடிந்த பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய அணிக்கு டெஸ்ட் பயிற்சியில் உதவ, ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டதாகவும், அதற்காக சென்று உதவியதாகவும் தெரிவித்துள்ளார்.