முட்டாள் இருக்கக்கூடாது - அணி தேர்வில் ...விராட் விவகாரம் - கொந்தளிக்கும் முன்னாள் வீரர்
வரும் உலகக்கோப்பை டி20 தொடரில் இந்தியா அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி தேர்வாகுவதை தொடர்ந்து சர்ச்சைகள் நீடித்து வருகின்றது.
விராட் கோலி தேர்வு
மேற்கிந்திய தீவுகள் மற்றும் யு.எஸ்.ஏ நாடுகளில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை டி20 தொடரில் இந்தியா அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி இடம் பெறுவதை கேள்விக்குறியான ஒன்றாக உள்ளது.
அணி தேர்வு குறித்து பேசிய ஜெய் ஷா கேப்டன் ரோகித் சர்மாவிடம் போட்டி நடக்கும் நாடுகளின் சூழல் விராட்டிற்கு சாதகமாக இருக்காது என்று குறிப்பிட்டு அதன் காரணமாக அவரை தேர்வில் வைக்கவேண்டாம் என கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஆனால், கேப்டன் ரோகித் சர்மா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த செய்திகள் வெளியான நிலையில், பல சீனியர் வீரர்களும் விராட்டிற்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.
இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கீர்த்தி ஆசாத், ஜெய் ஷாவை மறைமுகமாக விமர்சித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு,
முட்டாள்
மற்ற தேர்வாளர்களிடம் பேசி விராட் கோலிக்கு டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை என நம்பவைக்க அஜித் அகர்கருக்கு ஏன் அவர் தேர்வாளர் அல்ல ஜெய் ஷா பொறுப்பு கொடுக்க வேண்டும். இதற்கு, மார்ச், 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
ஆதாரங்களை நம்பினால், அஜித் அகர்கர் தன்னையோ அல்லது மற்ற தேர்வாளர்களையோ சமாதானப்படுத்த முடியவில்லை.ஜெய் ஷா ரோஹித் சர்மாவையும் கேட்டார், ஆனால் ரோஹித் எங்களுக்கு விராட் கோலி தேவை என்று கூறினார்.
Why should Jay Shah, he is not a selector, to give responsibility to Ajit Agarkar to talk to the other selectors and convince them that Virat Kohli is not getting a place in the T20 team. For this, time was given till 15th March. If sources are to be believed, Ajit Agarkar was… pic.twitter.com/FyaJSClOLw
— Kirti Azad (@KirtiAzaad) March 17, 2024
விராட் கோலி டி20 உலகக் கோப்பையில் விளையாடுவார் மற்றும் அணி தேர்வுக்கு முன்னதாக அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். Nincompoops(முட்டாள் என பொருள்) தேர்வு செயல்பாட்டில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது.