கொழுந்துவிட்டு எரியும் சதுரகிரி மலை - 3000 பக்தர்கள் தவிப்பு!

Fire Virudhunagar
By Vinothini Jul 18, 2023 05:50 AM GMT
Report

சதுரகிரி மலையில் திடீரென காட்டுத்தீ பரவியதால் தரிசனத்தினிற்கு சென்ற பக்தர்கள் சிக்கி தவிக்கின்றனர்.

சதுரகிரி மலை கோவில்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்திரமகாலிங்கம், சந்தனமகாலிங்க சுவாமி கோவில்கள் அமைந்துள்ளன. இங்கு ஆடி அம்மாவாசையன்று சிறப்பு வழிபாட்டு நடைபெறும்.

forest-fire-in-chaturagiri-hill

இதனால் சாமி தரிசனத்திற்காக பல இடங்களில் இருந்து வந்த பக்தர்கள் அங்குள்ள தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர். பின்னர் அங்கிருந்து மலைப்பகுதி வழியாக கோவிலுக்கு நடந்து சென்றனர்.

காட்டுத்தீ

இந்நிலையில், மலைப்பாதையை ஒட்டிய தவசிப்பாறை 5-வது பீட் வனப்பகுதியில் இரட்டை லிங்கம் மற்றும் பச்சரிசிப்பாறை இடையே உள்ள நாவலூற்று பகுதியில் திடீரென நேற்று மாலை 4 மணி அளவில் காட்டுத் தீப்பற்றியது. இங்கு தண்ணீர் இல்லமால் செடி கொடிகள் காய்ந்து கிடந்தது, அதனால் காட்டுத்தீ மிக வேகமாக பரவியது.

forest-fire-in-chaturagiri-hill

இதனால் அமாவாசை தரிசனத்திற்காக சென்ற பக்தர்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழே இறங்கி வர தடை விதிக்கப்பட்டு மலையில் உள்ள கோவில் வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதனையடுத்து சாப்டூர் வனச்சரகர் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட வனத்துறையினர், தீ அணைப்பு காவலர்கள் அனைவரும் போராடி தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.