ஜவ்வுதான் கிழிந்தது.. இறப்பார்னு நினைத்து கூட பார்க்கல - கதறிய பிரியா தந்தை!

Chennai Ma. Subramanian Death
By Sumathi Nov 15, 2022 05:54 AM GMT
Report

பிரியாவின் இறப்பிற்கு காரணமான மருத்துவர்களை கைது செய்ய அவரது தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரியா இறப்பு

கால்பந்தாட்ட விராங்கனை பிரியாவுக்கு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் வலது கால் முட்டி ஜவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சைக்கு பின் பிரியாவுக்கு ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டதால் வலது கால் அகற்றப்பட்டது.

ஜவ்வுதான் கிழிந்தது.. இறப்பார்னு நினைத்து கூட பார்க்கல - கதறிய பிரியா தந்தை! | Football Player Priya Passed Away Father Interview

இதனையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்,

கதறிய தந்தை

அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களின் கவனக்குறைவு தான் மாணவி பிரியாவின் உயிரிழப்புக்கு காரணம். கவனக்குறைவாக செயல்பட்ட இரண்டு மருத்துவர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்துக்கு 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், பிரியாவின் சகோதரர்கள் மூவரில் ஒருவருக்கு அரசு வேலைக்கான உத்தரவாதம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, பிரியாவின் தந்தை பிரியாவுக்கு ஜவ்வுதான் கிழிந்துள்ளது, பெரிய மருத்துவமனை தேவையில்லை என கூறினார்கள். ஆனால், அவர் உயிரிழப்பார் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. மேலும், பிரியா இறப்புக்கு காரணமான மருத்துவர்களை கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.