கால்பந்து ஜாம்பவான் பீலே மரணம் - ரசிகர்கள் வேதனை!
கால்பந்து ஜாம்பவானான பீலே, உடல்நலக்குறைவால் சிகிச்சையில் இருந்த நிலையில் காலமானார்.
பீலே மறைவு
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே(82). சர்வதேச போட்டியில் அதிக கோல்கள் அடித்த ஹீரோவாக வலம் வந்தவர். அந்த தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு அவருக்கு பெருங்குடலில் சிறிய கட்டி (புற்றுநோய் ) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனையடுத்து அறுவை சிகிச்சை செய்து அக்கட்டி அகற்றப்பட்டது. தொடர்ந்து தற்போது மூச்சு திணறலால் அவதிப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதனால், வரது உடல்நிலை மிகவும் பலவீனமடைந்து
மோசமான நிலையில் இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். பீலே மரணமடைந்ததை அவரது மகள் இன்ஸ்டாகிராம் மூலம் உறுதிபடுத்தியுள்ளார்.