சிறையில் தனி ரூம், வீட்டு சாப்பாடு; ரத்தம் கொதிக்குது - சந்திரபாபு நாயுடுவின் மகன் ஆவேசம்!
சந்திரபாபு நாயுடுவுக்கு சிறையில் சில சிறப்பு வசதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடு
சுமார் 300 கோடி ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அதிகாரிகள் கைது செய்தனர். இதனால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சந்திரபாபு நாயுடுவுக்கு வீட்டில் சமைத்த உணவுகள், மருந்துகளை எடுத்துக் கொள்ள,
சிறப்பு சலுகை
ஒரு தனிச் சிறப்பு அறை எனப் பல சலுகைகள் தரப்பட்டுள்ளது. வரும் செப். 22ஆம் தேதி காலை 10.30 மணிக்கு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவின் மகனும், தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளருமான நாரா லோகேஷ், "எனது ரத்தம் கொதிக்கிறது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு எல்லையே இல்லையா?
தனது நாட்டிற்காகவும், மாநிலத்திற்காகவும், தெலுங்கு மக்களுக்காகவும் எவ்வளவோ செய்து கொடுத்த என் தந்தைக்கு இப்படியொரு அநீதி செய்துள்ளனர்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்டம் காண்கிறதா இந்திய விமான சேவை - ஏர் இந்தியா விமானத்தில் மீண்டும் தொழில்நுட்பக் கோளாறு IBC Tamil

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan
