ஆழ்துளை கிணற்றில் தண்ணீருடன் 10 அடி உயரத்தில் சீரிய தீ பிழம்பு - பதறி ஓடிய விவசாயி!
ஆந்திராவில் விவசாயி ஒருவரின் நிலத்தில் இருந்த கிணற்றில் தீ பிழம்பு வந்ததால் மக்கள் பீதியில் உள்ளனர்.
ஆழ்துளை கிணறு
ஆந்திர மாநிலம், அம்பேத்கர் கோன சீமா மாவட்டம் ராஜோலு மண்டலத்தில் உள்ள சிவகோடு என்ற பகுதியில் விவசாயி ஒருவரின் நிலத்தில் ஆழ்துளை கிணறு உள்ளது. அதிலிருந்து தண்ணீர் எடுப்பதற்காக அதன் உரிமையாளர் மோட்டாரை ஆன் செய்தார்.
அப்போது, 30 அடி வரை தண்ணீரும், 10 அடி உயரத்திற்கு தீயையும் கக்கியது. இதனை கண்டு அந்த நிலத்தின் உரிமையாளர் மற்றும் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். இது குறித்து பேரிடர் மேலாண்மை குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதிகாரிகள் ஆய்வு
இந்நிலையில், பேரிடர் மேலாண்மை குழு ஆய்வு மேற்கொண்டதில், அந்த இடத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தி கைவிடப்பட்ட கியாஸ் பைப் லைன் இருப்பதாகவும், இது பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் உள்ள நிலையில் இதில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் கூறினர்.
Triggers panic, #fire from unused borewell near Sivakodu Aqua Pond in #Razole mandal of Ambedkar #Konaseema dist.
— Surya Reddy (@jsuryareddy) July 15, 2023
Villagers suspects leakage of a #ONGC gas pipeline. Police, ONGC fire fighters rushed to the scene.#AndhraPradesh #GasLeakage #FirefromBorewell pic.twitter.com/uOipE3ZjyE
மேலும், இந்த ஆழ்துளை கிணறு மொத்தம் 250 அடியில் அமைக்கப்பட்டிருப்பதை அறிந்தனர். பூமிக்கு அடியில் இருந்து இயற்கையாக வெளியேறிய கியாஸ் தீயை கக்கியது தெரியவந்தது. இதையடுத்து மண் ஆகியவற்றை நிரப்பி ஆழ்துளை கிணற்றை மூடினர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.