60வது திருமண நாள்; அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து - 3 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி!

Accident Death Tiruppur
By Sumathi Apr 09, 2024 03:56 AM GMT
Report

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

சாலை விபத்து

திருப்பூரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி சித்ரா. இவர்கள் தங்களது 60-வது திருமண நாளை கொண்டாடுவதற்காக திருக்கடையூர் சென்று விட்டு திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

bus accident

அதன்படி, வெள்ளகோவிலை கடந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது ஓலப்பாளையம் என்னும் இடத்தில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து சந்திரசேகர் ஓட்டிச் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

சாலை விபத்து..திருமணமான 3 நாட்களில் உயிரிழந்த புதுமண தம்பதி

சாலை விபத்து..திருமணமான 3 நாட்களில் உயிரிழந்த புதுமண தம்பதி

5 பேர் பலி

இதில், சந்திரசேகர் சித்ரா மற்றும் இளவரசர், அரிவித்ரா மூன்று மாத குழந்தை சாக்சி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு நபர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

60வது திருமண நாள்; அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து - 3 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி! | Five People Were Killed In An Accident Tirupur

இந்த விபத்து காரணமாக கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே சம்பவ இடம் விரைந்த போலீஸார் கார் மற்றும் பேருந்தை மீட்டு போக்குவரத்தை சரிசெய்தனர்.

இதனையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.