ரேபரேலியில் கடும் பனி காரணமாக பயங்கர சாலை விபத்து - 3 பேர் பலி...!

Viral Video Uttar Pradesh
By Nandhini Jan 11, 2023 06:56 AM GMT
Report

ரேபரேலியில் கடும் பனி காரணமாக பயங்கர சாலை விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கர சாலை விபத்து

உத்திரபிரதேச மாநிலம், ரேபரேலியில் கடும் பனி காரணமாக வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சாலைவிபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். சிலர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், உயிரிழந்தவர்களை உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

uttar-pradesh-accident-viral-video