சிறைத்துறை கொடூரம்; மொட்டை அடித்து; கழிவறை சுத்தம் செய்ய வைக்கப்பட்ட தமிழக மீனவர்கள்!

Tamil nadu Sri Lanka
By Sumathi Sep 16, 2024 05:25 AM GMT
Report

இலங்கையில் தமிழக மீனவர்கள் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

மீனவர்கள் கைது

இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், கணேசன், சேசு, அடைக்கலம் ஆகிய 3 மீனவர்கள்

சிறைத்துறை கொடூரம்; மொட்டை அடித்து; கழிவறை சுத்தம் செய்ய வைக்கப்பட்ட தமிழக மீனவர்கள்! | Fishermen To Shave Their Heads By Srilanka

இரண்டாவது முறையாக கைதாகி 6 மாத சிறை, தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், அபராதத் தொகை செலுத்தவில்லை எனக் கூறி,

தமிழகம் வந்த சீனா பூண்டு; உயிருக்கே ஆபத்தாம்.. எப்படி அடையாளம் காண்பது?

தமிழகம் வந்த சீனா பூண்டு; உயிருக்கே ஆபத்தாம்.. எப்படி அடையாளம் காண்பது?


சிறைத்துறை கொடுமை

இலங்கை சிறைத்துறை போலீசார் தமிழக மீனவர்களுக்கு மொட்டை அடித்தும், சிங்கள கைதிகள் பயன்படுத்திய கழிவறையை சுத்தம் செய்ய வைத்தும் துன்புறுத்தியுள்ளனர்.

சிறைத்துறை கொடூரம்; மொட்டை அடித்து; கழிவறை சுத்தம் செய்ய வைக்கப்பட்ட தமிழக மீனவர்கள்! | Fishermen To Shave Their Heads By Srilanka

தொடர்ந்து சொந்த ஊர் திரும்பிய மீனவர்கள் இதனை வேதனையுடன் தெரிவித்துள்ளனர். அதன்பின் இலங்கை அரசின் தொடர் அத்துமீறல், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி ராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக பேசியுள்ள மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ”இலங்கை சிறையில் தமிழக மீனவர்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.