முதல் பெண் சிஐஎஸ்எஃப் தலைவர் - இந்திய வரலாற்றில் இதுதான் முதல்முறை!
நினா சிங் என்ற ஐ.பி.எஸ் அதிகாரி, முதல் பெண்ணாக முக்கியப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.]
நினா சிங்
மத்திய தொழிற்பாதுகாப்பு படை, விமான நிலையங்கள் மற்றும் மத்திய அரசு நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு கொடுத்து வருகிறது. இந்நிலையில், மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் புதிய டி.ஜி யாக நினா சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்முலம், டி.ஜி ஆக முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ராஜஸ்தானை சேர்ந்த இவர் 2021ம் ஆண்டில் இருந்து மத்திய தொழிற்பாதுகாப்புப் படையில் இருந்து வருகிறார். 2013-18ம் ஆண்டு வரை சி.பி.ஐ. இணை இயக்குநராகப் பணியாற்றினார்.
சிஐஎஸ்எஃப் தலைவர்
மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஷீனா போரா கொலை வழக்கு, மற்றும் நடிகை ஜியா கான் தற்கொலை வழங்கு விசாரணைகளை மேற்கொண்டார். இவரது கணவர் ரோஹித் குமார் ஐ.ஏ.எஸ் அதிகாரி.
அவர் தற்போது மத்திய நுகர்வோர் துறை அமைச்சகத்தின் செயலாளராக இருக்கிறார். பெண்கள் கமிஷன் செயலாளராக இருந்தபோது பல்வேறு முக்கியத் திட்டங்களை நிறைவேற்றினார்.
தனது இந்தப் புதிய பதவியில் அடுத்த ஆண்டு ஜூலை வரை நீடிப்பார்.