ஓடும் ரயிலில் திடீரென கொழுந்துவிட்டு எரிந்த பெட்டிகள் - அலறிய பயணிகள்!
Hyderabad
By Sumathi
ஐதராபாத் அருகே ஓடும் ரெயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திடீர் தீ விபத்து
தெலங்கானா, செகந்திராபாத் - மேற்கு வங்க மாநிலம் ஹவுரா இடையே இயக்கப்படும் ரயில்களில் ஒன்று பலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயில். இந்த ரயில், பொம்மைப்பள்ள்,
பஜிடிபள்ளி இடையே சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென 3 பெட்டிகளில் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்.
தப்பிய பயணிகள்
இந்த விபத்தில் தற்போது வரை எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து, ரயில் விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.