பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- தொழிலாளர்கள் உடல் கருகி பலி!

Fire Accident Death Thiruvallur
By Swetha Jun 01, 2024 05:24 AM GMT
Report

பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

 தீ விபத்து 

திருவள்ளூர் அடுத்து உள்ள காக்களூர் தொழிற்பேட்டையில் ஒரு தனியார் பெயிண்ட் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இங்கு மதிய வேளையில் திடீரென தீ பற்றியதில் கம்பெனியில் உள்ள கெமிக்கல் பெயிண்ட் பேரல்கள் தீப்பிடித்து பயங்கரமாக வெடித்து சிதறியுள்ளது.

பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- தொழிலாளர்கள் உடல் கருகி பலி! | Fire Accident At Paint Factory 3 Dead

இதனால் ஒட்டுமொத்த தொழிற்சாலையும் தகதகவென எரிய தொடங்கியது. இந்த விபத்தில், அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த ஷோபனா(31), சுகந்தி(56), புஷ்கர்(40) மற்றும் பார்த்தசாரதி(45) ஆகிய 4 பேரும் சிக்கியுள்ளனர். இதில் ஷோபனா மற்றும் லேசான காயங்களுடன் உயிர் தப்பித்து,

24 மணி நேரமாக எரியும் தொழிற்சாலை... வங்கதேசத்தில் பயங்கர விபத்து

24 மணி நேரமாக எரியும் தொழிற்சாலை... வங்கதேசத்தில் பயங்கர விபத்து

தொழிலாளர்கள்

தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். தற்போது, இறந்தவர்கள் உடல்கள் கருகிய நிலையில் எலும்புக்கூடுகளாக இருப்பதால் அடையாளம் காண இயலவில்லை எனவும், நான்காவது நபரை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- தொழிலாளர்கள் உடல் கருகி பலி! | Fire Accident At Paint Factory 3 Dead

இந்த விபத்து மின்சார வயர்கள் கருகி ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.இதையடுத்து இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அவர்களை மீட்கும் பணியை தீயணைப்பு துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இது தொடர்பாக புட்லூர் கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த் அளித்த புகாரின் பேரில் பெயிண்ட் தொழிற்சாலையின் உரிமையாளர் மோகன் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.