கொழுந்துவிட்டு எரிந்த வீடு - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

India Mumbai Death
By Swetha Jun 25, 2024 07:51 AM GMT
Report

அதிகாலை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

 எரிந்த வீடு 

டெல்லி பிரேம் நகரில் உள்ள ஒரு வீட்டு கட்டிடத்தில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தகவலறிந்து விரைந்து வந்த டெல்லி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

கொழுந்துவிட்டு எரிந்த வீடு - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி! | Fire Accident At Home 4 Of Family Dead

தீ பற்றிய வீட்டிலிருந்து பலத்த தீக்காயங்களுடன் 4 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் 4 பேரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பூனையால் நேர்ந்த விபரீதம்.. தீப்பற்றி எரிந்த வீடு - ரூ.11 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்!

பூனையால் நேர்ந்த விபரீதம்.. தீப்பற்றி எரிந்த வீடு - ரூ.11 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்!

4 பேர் பலி

உயிரிழந்தவர்கள் ஹீரா சிங் (48), நீது சிங் (46), ராபின் (22), லக்ஷ்யா (21) என அடையாளம் கண்டறிந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வீட்டில் இருந்த இன்வெர்ட்டரில் இருந்து தீப்பிடித்து சோபாவில் தீப்பற்றியது.

கொழுந்துவிட்டு எரிந்த வீடு - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி! | Fire Accident At Home 4 Of Family Dead

பின்னர் வீட்டின் பிற பகுதிகளுக்கும் தீ பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும், தீ விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.