பூனையால் நேர்ந்த விபரீதம்.. தீப்பற்றி எரிந்த வீடு - ரூ.11 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்!
பூனையால் ஒரு வீடே தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீப்பற்றி எரிந்த வீடு
சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளிவந்தது. அதில், வீட்டில் இருந்த மின்சார குக்கரை வீட்டு உரிமையாளர் அணைத்து வைத்திருந்தார்.
மின் கசிவு
அப்போது அவர் வளர்த்த பூனை அந்த மின்சார குக்கரை தவறுதலாக ஆன் செய்துள்ளது. இதனால் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக வீட்டில் தீப்பிடித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் ரூ.11.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பாக தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது.