கேப்டன் விவகாரம்...இரண்டாக உடைந்த மும்பை இந்தியன்ஸ்!! குழப்பத்தில் நிர்வாகம்
மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் 2 பிரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ்
ஹர்திக் பாண்டியா மீது சரமாரி விமர்சனங்கள் உள்ளது. கேப்டனாக - பேட்ஸ்மேனாக - பௌலராக அவர் சொதப்பினார் என்பதை காட்டிலும், கேப்டன் பதவி ஏற்றதே இன்றும் விமர்சனமாக மும்பை கேம்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
ரோகித் சர்மாவிற்கு ஆதரவாக சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் பேசிவந்தாலும், இந்த ஆண்டு மும்பை அணி வெளியேற அவரும் ஒரு காரணமே. ஒரு சதத்தை தவிர, ஒரு ஓப்பனராக ரோகித் பெரிய பங்களிப்பை அணிக்கு அளிக்கவில்லை.
2 குழு
ஹர்திக் பாண்டியாவை கேப்டன் பதவியில் இருந்து மாற்றவேண்டும் என அணி வீரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அணிகுளீய தற்போது 2 குழுக்கள் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது மும்பை அணியில் விளையாடும் இந்திய வீரர்கள் ரோகித் சர்மா கேப்டனாக விரும்புவதாகவும், வெளிநாடு வீரர்கள் ஹர்திக் பாண்டியா தரப்பில் நிற்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே சூர்யகுமார் யாதவ், பும்ரா போன்றோர் சில கெடுபிடியான நிபந்தனைகளை வைத்து அப்படியில்ல என்றால், அடுத்தாண்டு அணியில் இருந்து விலகும் முடிவில் இருப்பதாக சொல்லப்பட்டு வரும் சூழலில், தற்போது அணிக்குள் டீம் உருவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.