பற்றி எரியும் நாடு; மேயர் மீது பயங்கர தாக்குதல் - மக்கள் போராட்டத்திற்கு என்ன காரணம்?
17 வயது இளைஞரை போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கிச் சூடு
பிரான்ஸ், பாரிஸின் புறநகர்ப் பகுதியில் போக்குவரத்து வாகனச் சோதனையின்போது, நஹேல்(17) சிறுவன் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நான்கு நாட்களுக்கு மேலாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியதை தொடர்ந்து நாடே பற்றி எரிய தொடங்கியுள்ளது.
அந்த சிறுவனின் தாயார் பேசுகையில், ``நான் ஒட்டுமொத்த காவல்துறையையும் குறை கூறவில்லை. என் மகனின் உயிரைப் பறித்த அந்த ஒரு நபரை மட்டும்தான் குறிப்பிடுகிறேன். அந்த நபர் ஓர் அரபு முகத்தைப் பார்த்தார், உயிரைப் பறிக்க நினைத்தார்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், நஹேலை சுட்டுக் கொன்ற 38 வயது போலீஸ் அதிகாரி,
வெடித்த கலவரம்
எங்கு அந்த சிறுவன் வேறு யார் மீதாவது காரை ஏற்றிவிடுவானோ என்ற அச்சத்தில் துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிவித்தார். தொடர்ந்து, போராட்டம் வன்முறையாக மாறியதில், பள்ளிகள் மற்றும் காவல் நிலையங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டும், தாக்கப்பட்டும் உள்ளன. 40-க்கும் மேற்பட்ட கார்கள் தீக்கிரையாகி உள்ளன.
170 காவல் துறை அதிகாரிகள் காயம் அடைந்து உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட 180-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில், பாரீசில் உள்ள நகரம் ஒன்றின் மேயரான வின்சென்ட் ஜீன்பிரன் என்பவர் வீடு மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கும்பலாக சென்று தாக்குதல் நடத்தி உள்ளனர்.
வீட்டில் அவரது குடும்பத்தினர் தூங்கி கொண்டிருந்தபோது தீ வைத்து கொளுத்தி உள்ளனர். இதில், அவரது மனைவி மற்றும் குழந்தைகளில் ஒன்று காயமடைந்து உள்ளனர்.