உலகக் கோப்பை கால்பந்து: இப்படித்தான் உடை அணியனும் - மீறினால் சிறை!
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், பெண் ரசிகர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
FIFA
கத்தாரில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி(FIFA), நவம்பர் 20-ம் தேதி தொடங்கி டிசம்பர் 18-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில், 32 அணிகள் பங்கேற்க உள்ளன.
இதனை காண ஏராளமான ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், பெண் ரசிகர்களுக்கு சில கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது. இக்கால்பந்து போட்டியை வெளிநாடுகளிலிருந்து காண வரும் பெண் ரசிகர்கள்,
கட்டுப்பாடு
நாட்டின் விதிகளை மதிக்கும் படி உடைகளை அணிந்து வர வேண்டும் கவர்ச்சியான உடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். அதை கடைப்பிடிக்க தவறும் பெண்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது.
மேலும், மைதானங்களில் ரசிகர்களை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.