ராணுவத்தில் பாலியல் வன்கொடுமை.. மரியாதை பெற இதனை செய்கிறோம் - சிப்பாய் பெண்கள் வேதனை!

United States of America Sexual harassment World
By Vinothini Aug 25, 2023 07:08 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

ராணுவ பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடக்கும் சம்பவ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அறிக்கை

ராணுவத்தில் தற்பொழுது பெண்களும் ஆர்வத்துடன் பங்கு வகித்து வருகின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ராணுவ அறிக்கை ஒன்றில், அமெரிக்காவில் பெண் சிப்பாய்கள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலினம் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

female-militants-facing-sexual-harassment

அதில், "ராணுவத்தின் ஸ்பெஷல் ஆபரேஷன்களில் (Army Special Operation), பெண்கள் பெரும்பாலும் நியமிக்கப்படுவது இல்லை. அப்படி ஸ்பெஷல் ஆபரேஷன்களில் பணியாற்றும் பெண்களிடம் எதிர்மறையான அணுகுமுறை காட்டப்படுகிறது. பெரும்பாலும் மூத்த அதிகாரிகளிடம் இருந்தே பாலினம் குறித்த வெளிப்படையான கமென்ட்டுகள் வந்ததுள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.

ராணுவ பெண்கள் வேதனை

இதனை தொடர்ந்து, அந்த அறிக்கையில் ராணுவ பெண்கள் கூறியது, "தகுதி குறைந்த ஆண்களுக்கு வழங்கப்படும் வேலைகளுக்கு தாங்கள் அனுப்பப்படுகிறோம், மரியாதையைப் பெற நாங்கள் இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டி இருக்கிறது" என்றும், "பெண்கள் ராணுவத்தின் முன் வரிசை போர் வேலைகளுக்கு நகர்ந்தபோது, சில நேரங்களில் மோசமான கமென்ட்டுகளை வழங்குகிறார்கள்.

female-militants-facing-sexual-harassment

மேலும் தலைவர் பதவியை எட்டுவதில் சவாலான நிலையில் இருக்கிறார்கள்" என்றும் வேதனையுடன் கூறியுள்ளனர். இது ராணுவ சிப்பாய்களில் 837 பெண்கள், 3,238 ஆண்கள் 5,000-க்கும் மேற்பட்ட ராணுவ சிறப்பு நடவடிக்கைப் படைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என ஆய்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.