இதற்காகத்தான் பெண் மருத்துவர் கொலையா? தந்தை திடுக்கிடும் தகவல்!

Attempted Murder Sexual harassment West Bengal Crime
By Sumathi Aug 19, 2024 04:17 AM GMT
Report

பெண் மருத்துவர் கொலை வழக்கில் அவரது தந்தை பல தகவல்கள் தெரிவித்துள்ளார்.

பெண் மருத்துவர் கொலை

கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையின் கான்பரன்ஸ் ஹாலில் தூங்க சென்ற பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

kolkatta doctor murder case

இந்த வழக்கை விசாரிப்பதற்காக டெல்லியை சேர்ந்த சிபிஐ அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பாக காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் (33) கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து, அடுத்த கட்டமாக நீதிமன்ற அனுமதியுடன் உண்மை கண்டறியும் சோதனையை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பெண் மருத்துவரின் தந்தை கூறியதாவது: எனது மகள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள சஞ்சய் ராய் உண்மையான குற்றவாளி கிடையாது.

காது, உதடு, கழுத்தில் கடித்த அடையாளம்; பெண் டாக்டர் வழக்கு - கதறும் பெற்றோர்!

காது, உதடு, கழுத்தில் கடித்த அடையாளம்; பெண் டாக்டர் வழக்கு - கதறும் பெற்றோர்!


தந்தை தகவல்

கொலைக்கு பின்னால் மிகப்பெரிய கும்பல் இருக்கிறது. ஆர்ஜி கர் மருத்துவமனையில் எனது மகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டார். பழிவாங்கும் நோக்கத்தோடு, 4 ஆண் மருத்துவர்களோடு எனது மகளுக்கு பணி வழங்கப்பட்டது. கருத்தரங்கு கூடத்தில் கொலைநடைபெற்றதாக போலீஸார் கூறுகின்றனர்.

sanjay rai

இதை நம்ப முடியவில்லை. மருத்துவமனையின்வேறு பகுதியில் எனது மகளை சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர். பின்னர் கருத்தரங்கு கூடத்தில் உடலை வைத்துள்ளனர்.

கொலையில் பலருக்கு தொடர்பு இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். இந்த மரணத்துக்கு நீதி கோரி 9 நாட்களாக மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.