பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தை - அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்

Sexual harassment POCSO Crime Nilgiris
By Karthikraja Oct 18, 2024 06:35 PM GMT
Report

15 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

குடி பழக்கம்

நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு திருமணமாகி 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள இவர், தினமும் குடித்து விட்டு வந்து அடிக்கடி மனைவியுடன் சண்டையிடுவாராம். 

coonoor

இவரின் கொடுமை தாங்காத மனைவி ஒரு கட்டத்தில் இவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் இரு மகள்களும் தந்தையின் பாதுகாப்பில் வசித்து வந்தனர். 

கர்ப்பமான 15 வயது சிறுமி - 64 வயது முதியவர் கைது

கர்ப்பமான 15 வயது சிறுமி - 64 வயது முதியவர் கைது

மகளுக்கு பாலியல் வன்புணர்வு

இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு 2வது மகள் பள்ளிக்கு சென்ற நிலையில், 10 ஆம் வகுப்பு படித்து வரும் தனது மூத்த மகளை வீட்டில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். 

daughter pregnant

இதைவெளியே சொன்னால் கொலையே செய்துவிடுவதாக மிரட்டியதால், பயத்தில் இதை பற்றி யாரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறாள் அந்த சிறுமி. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட தந்தை பலமுறை தனது மகளை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

நீதிமன்றம் தண்டனை

ஒரு நாள் சிறுமி திடீரென மயங்கி விழுந்த போது, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமியை டாக்டர்கள் பரிசோதித்த போது, அவர் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. இது குறித்து உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையில் தந்தைதான் மகளின் கர்ப்பத்துக்கு காரணம் என தெரிய வந்தது. எனவே போக்சோ சட்டத்தில் சிறுமியின் தந்தையை கைது செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு ஊட்டியில் உள்ள மகளிர் விரைவு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

பெற்ற மகளை பாலியல் வன்புணர்வு செய்த தந்தைக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி லிங்கம் உத்தரவிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசிடம் இருந்து ரூ.10 லட்சம் இழப்பீடு பெற்று தர மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.