கர்ப்பமான 15 வயது சிறுமி - 64 வயது முதியவர் கைது

Tamil nadu Salem
By Karthikraja Sep 24, 2024 04:30 PM GMT
Report

15 வயது சிறுமி முதியவர் கர்ப்பமாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவசாய தொழிலாளி

சேலம் மாவட்டம் தலைவாசல் தாலுகா வீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (64). விவசாயக் கூலி தொழிலாளியான இவர் கடந்த ஒரு வருடமாக வாழப்பாடி அருகே பொன்னாரம்பட்டி பகுதியில் உள்ள தனியார் விவசாய தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார். 

minor pregnancy

அந்த தோட்டத்தில் வேலை பார்க்க வந்த 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

சிறுமி கர்ப்பம்

இந்நிலையில் சிறுமிக்கு வயிறு வலி ஏற்பட, அவரது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தனர். இதில் சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிய வந்தது. 

pocso arrest

இதையடுத்து சிறுமி அளித்த தகவலின் பேரில் சிறுமியின் பெற்றோர் வாழப்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், முதியவரை போக்ஸோ(POCSO) சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.