கள்ளக்காதலை கைவிட மறுப்பு - மகள் என்றும் பாராமல் தந்தையே செய்த கொடூர காரியம்!

Tamil nadu Crime Death Tirunelveli
By Jiyath Apr 30, 2024 05:56 AM GMT
Report

கள்ளக்காதலை கைவிட மறுத்த மகளை அவரது தந்தை வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கள்ளக்காதல் 

திருநெல்வேலி மாவட்டம் கொங்கந்தான்பாறை பகுதியில் சேர்ந்தவர் முத்துப்பேச்சி (35). குடும்ப தகராறு காரணமாக கணவரை பிரிந்த இவர், தனது தந்தை மாரியப்பன் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் முத்துப்பேச்சிக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கள்ளக்காதலை கைவிட மறுப்பு - மகள் என்றும் பாராமல் தந்தையே செய்த கொடூர காரியம்! | Father Killed Daughter Daughter In Tirunelveli

இதனை அவரது தந்தை பலமுறை கண்டித்தும், அதனை பொருட்படுத்தாமல் கள்ளக்காதலை தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் முத்துப்பேச்சியை பாட்டி வீட்டில் கொண்டு போய் விடுவதாக கூறி மாரியப்பன் பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார்.

மக்களே உஷார்.. தவறவிடும் ATM கார்டுகளை பயன்படுத்தி நூதன மோசடி - வங்கி ஊழியர் கைது!

மக்களே உஷார்.. தவறவிடும் ATM கார்டுகளை பயன்படுத்தி நூதன மோசடி - வங்கி ஊழியர் கைது!

மகள் கொலை 

அப்போது ஒரு காட்டுப்பகுதிக்கு அருகே திடீரென பைக்கை நிறுத்தியுள்ளார். பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மகள் என்றும் பாராமல் முத்துப்பேச்சியின் தலையை துண்டாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

கள்ளக்காதலை கைவிட மறுப்பு - மகள் என்றும் பாராமல் தந்தையே செய்த கொடூர காரியம்! | Father Killed Daughter Daughter In Tirunelveli

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், முத்துபேச்சியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து குற்றவாளி மாறியப்பனை கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.