25 வயது பெண்ணை குடும்பமே சேர்ந்து கொலை செய்து எரித்த கொடூரம் - பகீர் பின்னணி!

Attempted Murder Crime Punjab
By Sumathi Oct 15, 2023 10:08 AM GMT
Report

25 வயது பெண்ணை குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரதட்சணை கொடுமை

பஞ்சாப், நாபா பகுதியில் வரதட்சணை கேட்டு 25 வயது பெண்ணை கணவர் மற்றும் குடும்பத்தினர் கொடுமைபடுத்தி கொன்றுள்ளனர். மேலும், சந்தேகம் வராமல் இருப்பதற்காக பெண்ணின் உடலை வேகமாக எரித்து தகனம் செய்துள்ளனர்.

25 வயது பெண்ணை குடும்பமே சேர்ந்து கொலை செய்து எரித்த கொடூரம் - பகீர் பின்னணி! | Father In Law Husband Killed Wife Punjab

அதனைத் தொடர்ந்து, பெண்ணின் சகோதரன் இதுகுறித்து புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில், போலீஸார் அவரது கணவர் நிமா ராம் மற்றும் மாமனாரை கைது செய்தனர்.

எரித்துக் கொலை

அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மாமியார் ரேகா ராணி மற்றும் மைத்துனர்கள் அஞ்சு மற்றும் சப்னா என்பதும் தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட பெண்ணின் சகோதரர் சுர்ஜித் சிங். இவர் சங்ரூரில் வசித்து வருகிறார்.

25 வயது பெண்ணை குடும்பமே சேர்ந்து கொலை செய்து எரித்த கொடூரம் - பகீர் பின்னணி! | Father In Law Husband Killed Wife Punjab

இவர் முன்னதாக, தனது சகோதரியின் மரணம் குறித்த தகவல் கிடைத்தது. அதிர்ச்சியடைந்து நான் சகோதரியை பார்க்க சென்றேன். ஆனால் நான் செல்வதற்குள் அவர்கள் எல்லாரும் சேர்ந்து எனது சகோதரியின் உடலை தகனம் செய்து விட்டார்கள். சகோதரியின் உடலுக்கு அவர்கள் தீ வைத்து தகனம் செய்துள்ளார்கள்.

ஆனால் தீயணைப்பு படையின் உதவியுடன் நான் தீயை அணைத்தேன். வரதட்சணைக்காக தனது சகோதரியை மாமியார் மற்றும் குடும்பத்தினர் அடித்து துன்புறுத்தி கொன்றுள்ளார். குழந்தை இல்லை என்பதால் என் சகோதரியை மனரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

5 வயது மகனின் தலையை சமைத்து சாப்பிட்ட தாய் - உறைய வைக்கும் சம்பவம்!

5 வயது மகனின் தலையை சமைத்து சாப்பிட்ட தாய் - உறைய வைக்கும் சம்பவம்!

குற்றம் சாட்டப்பட்ட நிமா ராம் என்பவரை அந்த பெண் 2021 இல் திருமணம் செய்து கொண்டுள்ளார். தலைமறைவான மற்றவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.